புதிய பிரதமரின் கீழ் சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) இன்று தெரிவித்துள்ளது.
புதிய பிரதமர் மற்றும் புதிய அமைச்சரவையின் கீழ் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் 11 சுயேச்சைக் கட்சிகளுடன் இன்று காலை இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இந்த உடன்படிக்கையை மேற்கொண்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது அனைத்துக் கட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உட்பட அரசாங்கத்தின் 11 சுயேச்சைக் கட்சிகள் அண்மையில் அரசாங்கத்தில் இருந்து விலகி, இலங்கையில் தற்போது நிலவும் தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு சர்வகட்சி இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படும் வரை பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இருக்க தீர்மானித்திருந்தன.
சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஆலோசிப்பதற்காக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று அழைப்பு விடுத்திருந்தார்.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கம் பதவி விலகக் கோரி நாடு முழுவதும் பொதுமக்கள் பாரியளவில் பொதுப் போராட்டங்களை நடத்தத் தொடங்கியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.