“எரிபொருள் கொண்டு செல்வதற்கு புதிய சப்ளையர்களுக்கான பதிவை உடனடியாக திறக்குமாறும், கடமைக்கு வராத சப்ளையர்களின் பதிவை ரத்து செய்யுமாறும் CPSTL க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என தனியார் எரிபொருள் பவுசர்கள் சங்கம் முன்னெடுத்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு பதிலளித்து எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவித்தார்.
“ரயில்கள், அரசுக்கு சொந்தமான பவுசர்கள், எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சொந்தமான பவுசர்கள் மற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடாத தனியார் வாடகை பவுசர்கள் சேவைகள் தொடரும்” என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
“இன்று மாலை 4 மணிக்கு விநியோகிப்பதற்கு மொத்தம் 381 பவுசர்கள் பயன்படுத்தப்பட்டன. அரசுக்கு சொந்தமான 84 பவுசர்கள், 103 எரிபொருள் நிரப்பு பௌசர்கள் மற்றும் 194 வாடகை பவுசர்கள் வேலை நிறுத்தத்தில் இல்லை. போதுமான ஆட்டோ டீசல், சூப்பர் டீசல், பெட்ரோல் 92 மற்றும் மண்ணெண்ணெய் எரிபொருள் நிலையங்களுக்கு வெளியிடப்பட்டு இருப்பில் உள்ளது. 95 பெட்ரோல் மட்டுப்படுத்தப்பட்டது” என்று அமைச்சர் மேலும் கூறினார்.