சமூக ஊடக செயற்பாட்டாளராகிய அனுருத்த பண்டார என்பவர், தம்மைக் கைதுசெய்து தடுத்து வைத்தமைக்கு எதிராக இலங்கையின் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மீறல் (FR) மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மாதத்தின் தொடக்கத்தில், ‘கோட்டா கோ ஹோம்’ என்ற முகநூல் பக்கத்தினை இயக்கியமைக்காக பண்டார, மோதர குற்றப் தடுப்பு பிரிவினரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவர் திடீரெனக் காணாமல் போனதினையடுத்து, அவர் கைது செய்யப்பட்டதினை மோதர குற்றப் தடுப்புப் பிரிவினர் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தியதினை அடுத்து, பொதுமக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.
அனுருத்த பண்டார, தம்மைக் கைது செய்தமையும், தடுத்து வைக்கப்படிருந்தமையும்மையும் தனது அடிப்படை உரிமையினை மீறுகின்ற செயலாகும் என கோரி உச்ச நீதிமன்றத்திடம் தீர்ப்பு வழங்குமாறு நேற்று மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்.