(ஏ.எல்.எம்.ஷினாஸ், ஏ.பி.எம்.ஷிஜாஸ்)
பெரியநீலாவணை பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்திருந்த வருடாந்த இப்தார் நிகழ்வு நேற்று (30) பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.ஜீ . துஸார திலங்க ஜெயலால்தலைமையில் பொலிஸ் நிலைய திறந்தவெளியில் நடைபெற்றது.
இந்த இப்தார் நிகழ்வில் பொலிஸ் உயர் அதிகாரிகள்,சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், சமயத் தலைவர்கள், வர்த்தகர்கள் மற்றும் பிரதேச மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
ரமழான் விசேட மார்க்க சொற்பொழிவை மௌலவி அஷ் செய்க் என்.ஜீ.அப்துல் கமால் (இஸ்லாஹி) நிகழ்த்தினார்.