மக்களினுடைய வேண்டுகோகோளினை ஏற்று அனைத்து தலைவர்களும் பதவி விலகி புதிய தேர்தலினை நடத்தி மீண்டும் புதிய அரசாங்கத்தினை தெரிவு செய்வதற்காகன் மக்களுக்கு இடமளித்தே ஆகவேண்டும். என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
மேற்படி உரையானது இன்று (01) பொலன்னறுவையில் இடம்பெற்ற மே தினக் கூட்டத்தின் போதே கலந்துகொண்டு தனது கருத்தினை தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மேற்படி கருத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் தனது ஆட்சிக் காலத்தினுள் நாட்டில் இதுபோன்று எவ்விதமானவொரு சூழ்நிலையும் இருபித்ததில்லை எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
தனது ஆட்சியினை தொடர்ந்து மிகவும் அழகான சிறப்பான நாட்டை மீண்டும் ராஜபக்ஷர்கள் கைப்பற்றியதாகவும் அவர் அவருரையில் மேலும் கூறினார்.
நாட்டில் தற்போது புதிய அரசாங்கத்தினை அமைப்பதே எமது நம்பிக்கையாக உள்ளது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் குறிப்பிட்டுள்ளார்.