குளியாப்பிட்டியில் நேற்று டிஃபென்டர் விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில் டிஃபென்டரின் சாரதி மற்றும் 14 வயது சிறுவன் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குளியாப்பிட்டிய கனதுல்ல பகுதியில் நேற்று இரவு டிஃபென்டர் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், காவற்துறையினரை பொலிஸ் நிலையத்திற்கு மாற்ற முற்பட்ட போது, குறித்த டிபன்டரை எரித்துள்ளனர்.
உயிரிழந்த மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் குளியாபிட்டிய கனதுல்ல பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.