மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்று ராஜபக்ச குடும்பம், அரசியல்வாதிகள் மற்றும் அரச நிறுவனங்களின் அதிகாரிகளுடன் தொடர்புடைய பல முக்கிய ஊழல்களை அம்பலப்படுத்தினார்.
பாராளுமன்ற உறுப்பினர் திஸாநாயக்கவின் கூற்றுப்படி, அம்பலப்படுத்தப்பட்ட ஊழல் நடவடிக்கைகள் கடந்த இரண்டு தசாப்தங்களாக இடம்பெற்றவையாகும்.
இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஜே.வி.பி.யின் தலைவர் ஊழல் மோசடிக்கான ஆதாரமாக கோப்புகள் அடங்கிய தொகுப்பை முன்வைத்தார்.