பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்கு சம்மேளனம் (IUBF) இன்று கோட்டையிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தது.
IUBF விகாரமஹாதேசி பூங்காவில் இருந்து எதிர்ப்பு பேரணியை ஆரம்பித்து காலி முகத்திடலை நோக்கி சென்றது.
கொழும்பில் உள்ள உலக வர்த்தக நிலையத்திற்கு அருகாமையில் வீதிகள் பொலிஸாரால் தடை செய்யப்பட்டிருந்த நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் தடைகளை அகற்றி முன்னோக்கிச் சென்றனர்.
இலங்கை மத்திய வங்கிக்கு முன்பாக இருந்த பொலிஸ் தடுப்புகளை அகற்றிய அவர்கள், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்பாக சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
IUBF எதிர்ப்பாளர்கள் அதன் பின்னர் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்று வரும் பொது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக காலி முகத்திடலை நோக்கிச் சென்றுள்ளனர்.
காலி முகத்திடலை ஆக்கிரமிப்பு பொதுப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதையடுத்து, அதனைச் சூழவுள்ள வீதிகளை பொலிஸார் மறித்திருந்த நிலையில், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்பாக போராட்டம் நடத்தப்படுவது இதுவே முதல் தடவையாகும்.