கொள்ளுப்பிட்டியில் உள்ள அலரிமாளிகைக்கு அருகில் உள்ள ஆர்ப்பாட்டக்காரர்களின் உடமைகள் மற்றும் வாகனங்கள் அனைத்தையும் அகற்றுமாறு கோட்டை நீதவான் நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இவை நடைபாதையை பயன்படுத்தும் பாதசாரிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்துவதுடன், பொதுமக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்துகின்றன என்ற அடிப்படையில் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
எவ்வாறாயினும், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்காத அமைதியான போராட்டங்களைத் தடை செய்யவில்லை என்று நீதிமன்ற உத்தரவு கூறுகிறது.
இதேவேளை, அலரிமாளிகைக்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் இலங்கை உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் (FR) மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், பிரதமர் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக, போராட்டம் நடக்கும் இடத்துடன் நடைபாதையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்றக் கோரி உத்தரவிட வேண்டும்.