இந்த வாரம் பாராளுமன்றத்திற்கு அருகில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களை தடுக்க உத்தரவிடுமாறு கோரிய கோரிக்கையை கடுவெல நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
நாளை (05) மற்றும் வெள்ளிக்கிழமை (06) பாராளுமன்றத்திற்கு அருகாமையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஆர்ப்பாட்டங்களைத் தடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தலங்கம காவற்துறையினரால் தடுப்பு உத்தரவுக்கான கோரிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
பாராளுமன்ற நுழைவு வீதிக்கு முன்பாக இன்று அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொல்துவ சந்திக்கு அருகாமையில் பாராளுமன்ற நுழைவு வீதியை மறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.