நாடாளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மஹரகம காவல் நிலையத்திற்கு அருகில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கைது செய்யப்பட்ட மாணவர்கள் கடுவலை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
காலி முகத்திடல் போராட்டக் களத்தை பிரதிநிதித்துவப்படுத்தி சபாநாயகரிடம் கடிதம் ஒன்றை கையளிப்பதற்காகவே இந்த இளைஞர்கள் வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அவர்களின் கைதுக்கு எதிராக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் (IUSF) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.