பாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் சியம்பலாபிட்டிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் பரிந்துரைக்கப்பட்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஆதரவைப் பெற்றார்.
எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய (SJB) பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட இம்தியாஸ் பகீர் மார்க்கருக்கு எதிராக போட்டியிட்ட பின்னர் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டதுடன், ரஞ்சித் சியம்பலாபிட்டிய 148 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதோடு, மார்க்கர் 65 வாக்குகளைப் பெற்றார்.
வாக்கெடுப்புக்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய சபையின் பிரதி சபாநாயகராக செயற்பட்டார்.
எவ்வாறாயினும், தேசிய நெருக்கடி காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இருக்கப்போவதாக அறிவித்ததையடுத்து அவர் அந்த பதவியில் இருந்து விலகினார்.
எம்.பி., துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தற்போது அதே பதவிக்கு போட்டியிடுவது ஏன் என்பது தெரியவில்லை.
இந்த வாக்கெடுப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அண்மையில் அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் அரசாங்கத்துடன் இணைந்த ஏனைய கட்சிகளின் உண்மையான விசுவாசத்தை இந்த வாக்கெடுப்பு வெளிப்படுத்தும் என தெரிவித்தார்.
ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் வேட்புமனுவை ஆதரிப்பதாக அரசாங்கம் தெரிவித்திருந்த நிலையில், இம்தியாஸ் பாக்கீர் மார்க்கரை SJB பரிந்துரை செய்துள்ளதாக அவர் கூறினார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஏனையவர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறிவிட்டதாகக் கூறி இத்தனை நாட்களாக நாடகம் நடத்தியதை இது அம்பலப்படுத்தும் என பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.