தேசிய போர்வீரர் கொடி இன்று (06) காலை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஏற்றப்பட்டது.
போர் மாவீரர் சேவைகள் அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர (ஓய்வு பெற்ற) முதலாவது போர்வீரர் கொடியை ஜனாதிபதிக்கு ஏற்றி வைத்தார்.
3 தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்து சுதந்திர தாயகத்திற்காக தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்த துணிச்சலான வீரர்களை நினைவுகூரும் வகையில் போர் மாவீரர் மாதம் கொண்டாடப்படுகிறது.
ஜனாதிபதி தேசிய போர் வீரன் கொடியை அணிவித்த நாளிலிருந்து போர் மாவீரர் கொண்டாட்ட மாதம் ஆரம்பமாகிறது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பிரிஸ், போர்வீரர் சேவைகள் அதிகாரசபையின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கித்சிறி ஏக்கநாயக்க (ஓய்வு பெற்ற) உட்பட பல முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.