இன்று பாராளுமன்ற வளாகத்தில் இருந்து வெளியேற முற்பட்ட பல பாராளுமன்ற உறுப்பினர்களை அங்கு கூடியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களால் எதிர்ப்பில் ஈடுபபட்டனர்.
பாராளுமன்றத்தை விட்டு வெளியேறும் மற்றொரு வீதியின் ஊடாக எம்.பி.க்கள் வெளியேற முற்பட்ட போதுஅங்கும் சூழ்ந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் எம்.பி.க்களினுடைய வாகனங்களை மறித்து அவர்களை வெளியேற விடாமல் தடுத்து பிரதான பாராளுமன்ற நுழைவு வீதி வழியாக வெளியேறுமாறு அழைப்பு விடுத்தனர்.
இதற்கிடையில், அடுத்த நாடாளுமன்ற அமர்வு நடைபெறும் மே 17ஆம் திகதி வரை, நாடாளுமன்றத்துக்கு வெளியே நடைபெறும் போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு போராட்டக்காரர்கள் முடிவு செய்துள்ளனர்.