எதிர்வருகின்ற (09) திகதி திங்கட்கிழமை விசேட அறிக்கை ஒன்றினை வெளியிடவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்றைய தினம் நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது.
மேலும் இடைக்கால அரசாங்கத்தை அமைத்து புதிய பிரதமரின் கீழ் பயணிக்கக்கூடிய வழிவகை செய்யும் நோக்கில் பதவி விலகுவது சம்பந்தமாக பரிசீலிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இவகலந்துரையாடலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கையினை விடுத்துள்ளதாக அமைச்சரவை வட்டாரங்கள் குறிப்பிடுகின்றது.
அந்த வகையில், அது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை தாம் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூட்டத்திற்கு அறிவித்திருக்கின்றார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏற்கனவே பதவி விலகுவதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளதிருக்கின்றது.