இலங்கையில் இன்று முன்னெடுக்கப்படும் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலில் பங்குபற்றும் அரச ஊழியர்களின் சம்பள வெட்டுக் கூற்றை ஜனாதிபதி ஊடகப்பிரிவு நிராகரித்துள்ளது.
அரச ஊழியர்களின் சம்பளக் குறைப்பு தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவின் லெட்டர்ஹெட்களைப் பயன்படுத்தி சமூக ஊடக தளங்களில் பதிவுகள் பகிரப்பட்டு வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
ஹர்த்தாலில் பங்கேற்பதன் காரணமாக அரச ஊழியர்களின் மே மாத சம்பளம் குறைக்கப்படும் என சமூக ஊடகப் பதிவுகள் வெளியாகி வருகின்றன.
இக் குற்றச்சாட்டினை மறுத்துள்ள, ஜனாதிபதி ஊடகப்பிரிவின் நிர்வாகப் பிரிவு அத்தகைய உத்தரவினை எவரும் எமக்கு பிறப்பிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்த பொய்யான செய்தி தொடர்பில் ஏற்கனவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.