இலங்கையிலுள்ள வங்கி ஊழியர் சங்கதினர் மற்றும் பல வங்கித் தொழிற்சங்கங்களும் இணைந்து இன்றைய தினத்தில் மேற்கொள்ளப்படும் ஹர்த்தாலுக்கு ஆதரவளித்திருக்கின்றன.
அந்த வகையில் தொழிற்சங்கங்கள் நடத்தும் ஹர்த்தால் காரணமாக நாடு முழுவதும் உள்ள பல பொது மற்றும் தனியார் வங்கிகள் மூடப்படும் என தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
ஹர்த்தால் காரணமாக பல தனியார் வங்கிகளும் அதன் பல சேவைகளை கட்டுப்படுத்தும் முடிவை அறிவித்துள்ளன.