இலங்கையில் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தீர்மானம் குறித்து கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த சில வாரங்களாக, இலங்கை முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில், அமைதியான கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை அனுபவிக்கும் குடிமக்கள் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர், மேலும் இது இந் நாட்டின் ஜனநாயகத்திற்கு கிடைத்த பெருமையாகும். இவ்வாறான சூழ் நிலையில் , அவசரகால நிலையினை பிரகடனப்படுத்துவதற்கான காரணம் என்ன என்பதினை புரிந்துகொள்வது கொள்வது எனக்கு கடினமாக உள்ளது என கனேடிய உயர்ஸ்தானிகர் ட்வீட் செய்துள்ளார்.