தற்போதைய சூழ் நிலைமையில் அவசரகால சட்டமானது நாம் நாட்டின் பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு அச்சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
இதில் நாட்டில் மக்கள் தமது கருத்தினை தெரிவித்தல் மற்றும் அமைதியான முறையில் ஒன்றுக்கூடுதல் என்பன பொதுமக்களுடைய அடிப்படை உரிமைகளாக இருக்கின்ற போது, இப்படியான சூழ் நிலையில், தன்னிச்சையான கைதுகள் மற்றும் தடுத்து வைத்தல் போன்றவற்றுக்காக, இந்த அவசரகால சட்டத்தினை பயன்படுத்தக்கூடாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
எனவே, அவசரகால சட்ட பிரகடனத்தை உடேன் இரத்துச் செய்யுமாறு சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.