எதிர்வரும் 17 ஆம் திகதி பாராளுமன்றத்தை முற்றுகையிடவுள்ளதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது.
தற்போதைய நெருக்கடிக்கு நாடாளுமன்றம் தீர்வு காணும் வரை தாங்கள் போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனவும் எச்சரித்துள்ளது.
தொழிற்சங்க ஒரங்கிணைப்பு நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த சமரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
ஊழல்மிகுந்த ராஜபக்ச ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவத்காக 28 ஆம் திகதி வெற்றிகரமான வேலைநிறுத்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
மே 06 ஆம் திகதி அரச மற்றும் தனியார் பிரிவு, பெருந்தோட்டத்துறை, சிவில் அமைப்புகள், வெகுஜன அமைப்புகள், வர்த்தக சங்கங்கள், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், விவசாயிகள் சங்கம் மற்றும் தொழிற்சங்கவாதிகள் என்று பலரும் ஒன்றிணைந்து வரலாற்று சிறப்புமிக்க ஹர்த்தாலை முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில் தொடர்ந்து போராட்டங்களை நடத்த இவ்வமைப்பு தீர்மானித்துள்ளது.