நம்பிக்கையில்லாப் பிரேரணையினை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகின்ற திகதியினை குறித்து தீர்மானிப்பதற்காக பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவினுடைய விசேட கூட்டம் இன்று (09) நடைபெறவிருக்கின்றது.
இக்கூட்டமானது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுடைய தலைமையில் இன்று காலை 10.00 மணிக்கு நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
இதுதவிர, கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் மற்றும் நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமை தொடர்பிலும் விரிவாக ஆராயப்படவுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.