பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (09) தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக பல்வேறு செய்திகள் பரவி வருகின்ற போதிலும், இதுவரை நம்பகமான தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து ஜனாதிபதி, பிரதமர் உட்பட முழு பாராளுமன்றமும் பதவி விலக வேண்டும் என சமூகத்தில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
சென்ற ஒரு மாதங்களுக்ககும் மேலாக காலி முகத்திடலில் நடைபெற்று வருகின்ற போராட்டத்தின் காரணமாக இவ் போராட்டம் மேலும் தீவிரமடைந்து இதற்கு ஆதரவாக நாட்டின் பல்வேறு பட்ட பகுதிகளிலும் பொதுமக்கள் வீதிகளினை மறித்து போராட்டத்தினை நடத்தி வருகின்றார்கள்.
தற்போதைய சூழ் நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது பதவியினை விலகுவதற்கு தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் அண்மையில் பேசும் பொருளாக அமைந்திருக்கின்றது.
மேலும், பிரதமர் தவியிலிருந்து அவ்வாறு விலகினால் தற்போதிருக்கின்ற அமைச்சரவை கலைக்கப்படுவதோடு புதிய சர்வகட்சி ஆட்சியிணை அமைக்கவும் முன்மொழியப்பட்டிருக்கின்றது.
சென்ற வெள்ளிக்கிழமையன்று இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் தன்னுடைய பதவியினை இராஜினாமா செய்வதற்கு இணக்கம் தெரிவித்திருப்பதாக அறியமுடிகின்றது.