நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் வியாழன் 12 ஆம் திகதி காலை 7.00 மணி வரை தொடரும்.
பொதுச் சொத்துக்களைத் திருடவோ அல்லது தனி நபர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலோ ஈடுபடும் நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முப்படையினருக்கு பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் பதற்றமான சூழ்நிலைகள் பதிவாகியுள்ளதுடன், ரத்கம பிரதேச சபைத் தலைவரின் இல்லத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குறைந்தது மூவர் காயமடைந்துள்ளதுடன், நீர்கொழும்பிலும் மோதல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவங்கள் காரணமாக திங்கட்கிழமை நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் வியாழக்கிழமை (12) காலை 07 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.