முன்னாள் பிரதமரின் பாதுகாப்புப் பிரிவு பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட தரப்பினர் இன்று வாக்குமூலம் வழங்குவதற்காக, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருக்கின்றார்கள் இதில் தெரியவருவதாவது ஞாயிற்றுக்கிழமை கோட்டாகோகம மற்றும் மைனாகோகமவில் இடம்பெற்ற அமைதிப் போராட்டங்களின் மீது மேற்கொள்ளப்பட்டிருந்த தாக்குதல் குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காகவே இவர்கள் அழைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
மேலும் தெரியவருவருவதாவது இச் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் 2 பொலிஸ் அத்தியட்சகர்களின் தலைமையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினுடைய பணிப்பாளரின் மேற்பார்வையிலும், இடம்பெற்று வருவதாக தெரியவருகின்றது,