கொழும்பு நகரம் உள்ளிட்ட நாட்டின் ஏனைய பாகங்களில் இராணுத்தினரால் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், இன்று காலை முதல் கொழும்பு நகரில் கவச வாகனங்களுடாக கண்காணிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது..
அத்துடன், விசேட படையணியின் உந்துருளி பிரிவு, கொழும்பு, பிட்டகோட்டை, மிரிஹான, கிருலப்பனை, கொள்ளுப்பிட்டி முதலான பகுதிகளில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.