புதிய அரசாங்கம் அமைக்கப்படும் போது கொள்கை கலந்துரையாடல்களுக்கு தயாராக இலங்கையுடன் தொழில்நுட்ப மட்ட கலந்துரையாடல்களை தொடரவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) இன்று தெரிவித்துள்ளது.
“மே 9-23 இல் எங்களின் மெய்நிகர் பணியில், தொழில்நுட்ப மட்டத்தில் விவாதங்கள் தொடங்கி, திட்டமிட்டபடி தொடர்கின்றன, இதனால் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டவுடன் கொள்கை விவாதங்களுக்கு முழுமையாக தயாராக இருக்க வேண்டும்” என்று ஒரு சுருக்கமான IMF அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த நிதியம் இலங்கையில் ஏற்பட்டுள்ள அபிவிருத்திகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் சமூக பதட்டங்கள் மற்றும் வன்முறைகள் தொடர்பில் அக்கறை கொண்டுள்ளதாகவும் அது கூறியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கு இணங்கினால் இலங்கைக்கு உதவ நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.