நாடு முழுவதும் வன்முறைச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் பொலிஸ் நிலையங்களுக்கு துப்பாக்கிச் சூடு உத்தரவுகளை இலங்கை பொலிஸார் வழங்கியுள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) ஆதரவாளர்களால் கொழும்பில் அமைதியான அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு பொதுமக்கள் கோபத்தில் பதிலடி கொடுத்ததில் இருந்து பல வன்முறை சம்பவங்கள் மற்றும் பதட்டமான சூழ்நிலைகள் பதிவாகியுள்ளன.
நாட்டில் அமைதியின்மை ஏற்படுத்தினால் , SLPP அரசியல்வாதிககள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்ககளின் வீடுகள்,வாகனங்கள் மற்றும் பல்வேறு சொத்துக்கள் அழிக்கப்பட்டு, எரிக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் மக்களை தாக்கி சொத்துக்களை சூறையாடுவதை தடுக்கும் வகையில் ராணுவத்திற்கு ஏற்கனவே பாதுகாப்பு அமைச்சகத்தால் துப்பாக்கி சூடு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனைப் பின்பற்றிய இலங்கை காவல்துறை, நாட்டில் மேலும் வன்முறைகள் நடைபெறாமல் தடுக்க துப்பாக்கிச் சூடு உத்தரவும் பிறப்பித்துள்ளது.