நாட்டில் தற்போது அமைதியின்மையினை ஏற்படுத்துகின்ற வகையில் சமூக வலைத்தளங்களினைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையினை எடுக்கப்படும் என்று இலங்கை பொலிஸ்துறை எச்சரிக்கை ஒன்றினை விடுத்துள்ளது.
மேலும்,நாட்டில் அண்மையில் நடந்த கலவரங்களின்போது வன்முறைகளைத் தூண்டியது என்கின்ற வகையில் இதுவரை 59 சமூக ஊடக குழுக்களினையும் அவற்றின் நிர்வாகிகளினையும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு பொலிஸ் அறிக்கையொன்றினையும் வெளியிட்ட்டுள்ளது.
மேலும் வாகனங்கள்,வீடுகள் மற்றும் பிற சொத்துக்களின் மீது தாக்குதல்களினை நடத்துவதற்காக பல்வேறுபட்ட சமூக ஊடக தளங்கள் ஊடாககுறித்த குழுக்கள் மக்களினை திரட்டியதாகவும் பொலிஸ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
குறிப்பிடட சமூக ஊடக குழுக்கலினுடைய மற்றும் அதனுடைய நிர்வாகிகள் அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள பொலிஸார், இது தொடர்பாக இதற்க்கு முன்பதாகவே சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை நாடு பூராகவும் ஏற்பட்ட குழப்பங்களின்போது சமூக ஊடகங்களினை பயன்படுத்தி வன்முறையிணை தூண்டியமை கண்டறியப்படுமானால்உரியனபருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பொலிஸார் பொதுமக்களை எச்சரித்து குறித்த அறிக்கையினை வெளியிட்டுள்ளார்கள்.