முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோருக்கு வெளிநாடு செல்ல கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு விதித்துள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்த கோரிக்கைக்கு அமைய கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.