முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகும் வரையில் அலரிமாளிகைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட மைனா கோ கிராமம் இன்று முதல் நோ டீல் கிராமமாக மீண்டும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றைய தினம் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நோக்கில் இந்த புதிய கிராமம் அலரிமாளிகைக்கு முன்பாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .