இலங்கையில் நிலவும் அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையை உடனடியாகக் குறைப்பதற்கும் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் நடவடிக்கைகளை முன்மொழிவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட குழுவொன்றை நியமித்துள்ளதாக லங்காதீப தெரிவித்துள்ளது.
பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்குவது தொடர்பில் உரிய துறையினருடன் கலந்துரையாடுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன மற்றும் கட்சியின் செயலாளர் பாலித ரங்கே பண்டார ஆகியோர் குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
மருந்து தட்டுப்பாடு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் உதவித் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் உரம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து உரையாற்றவுள்ளார்.
இலங்கையின் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தொடர்பாக ஏற்படுகின்ற பிரச்சினைகள் என்பவற்றினை இல்லாமல் செய்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியினுடைய தேசிய அமைப்பாளரான சாகல ரத்நாயக்கவினை நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ.தே.க உறுப்பினர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளுடன் தேவையான கலந்துரையாடல்களை நடத்தி, பிரச்சினைகளைக் கண்டறிவதோடு, பிரதமருக்கு அறிக்கையொன்றில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் தீர்வுகளை வழங்குவார்கள்.