அடுத்த பிரதி சபாநாயகராக யாரை நியமிப்பது என்பது தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வருமாறு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று காலை தம்மைச் சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிடம் பிரதமர் இதனைத் தெரிவித்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பாராளுமன்றம் மே 17ஆம் திகதி கூடும் போது பிரதி சபாநாயகரை நியமிக்கப்படும்.
இவ் நியமத்தினை பெண் பாராளுமன்ற உறுப்பினரொருவருக்கு வழங்குமாறு கட்சித் தலைவர்களிடம் தாம் கோரிக்கை விடுப்பதாகவும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க குறிப்பிட்டுள்ளார்.