கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சைக்காக எதிர்வருகின்ற 20ஆம் திகதி விடுமுறை வழங்கப்படுவதோடு சகல பாடசாலைகளும் எதிர்வருகின்ற ஜூன் மாதம் 20ஆம் திகதி மீளவும் ஆரம்பிக்கப்பட இருப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் க.பொ.த சாதாரண தரப்பரீட்சையானது திட்டமிட்ட வகையில் எதிர்வருகின்ற 23ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு பரீட்சைகள் திணைக்களமானது ஏற்பாடுகளை செய்துள்ளது.
இந்தவகையில் விண்ணப்பதாரிகளினுடைய அனுமதி அட்டைகள் மற்றும் பரீட்சை நிலையங்களுக்கான வினாத்தாள்களினை பகிர்ந்தளிக்கின்ற செயற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்படுவதாக தெரி விக்கப்பட்டுள்ளது.
அதோடு பரீட்சைக்கு பொறுப்பான கண்காணிப்பு பணிக்குழாமினறினையும் தயார்படுத்தப்பட்டிருப்பதாக பரீட்சைகள் திணைக்களமானது மேலும் அறிவித்துள்ளமை குறிப்பிடவேண்டிய விடையமாகும்.