1190 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் விநியோகம் செய்யும் வரை அடுத்த 3 நாட்களுக்கு வரிசையில் நிற்கவோ அல்லது எரிபொருள் நிரப்பவோ வேண்டாம் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
“நேற்று டீசல் சரக்குகள் வரவழைக்கப்பட்டு அடுத்த 2 வாரங்களில் @IndiainSL கிரெடிட் லைனில் 3 கப்பல்கள் இலங்கையினை அடையும் நிலையில், போதுமான எரிபொருள் கிடைக்கும். 1190 எரிபொருள் நிலையங்கள் விநியோகம் முடியும் வரை அடுத்த 3 நாட்களுக்கு வரிசையில் நிற்கவோ அல்லது நிரப்பவோ வேண்டாம் என்று பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறேன் என அமைச்சர் தனது உத்தியோகபூர்வ ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்.