சில நாட்களுக்கு முன் நாட்டின் பல பகுதிகளிழும் ஏற்பட்டிருந்த வன்முறை சம்பவங்களில் 71 பாராளுமன்ற உறுப்பினர்களினுடைய வீடுகளுக்கும் சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டிருந்தது.
அந்தவகையில்உறுப்பினர்களுக்கு விரைவாக இவ் புதிய வீடுகளை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது.
தலவத்துகொட எனும் பகுதியில் நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான காணியில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சுமார் 100 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
மேலும், அவற்றினை விரைவாக நிறைவு செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கி வைப்பது தொடர்வாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.
கடந்த நாட்களில் இடம்பெற்றிருந்த வன்முறை சம்பவங்களின் காரணமாக சில பாராளுமன்ற உறுப்பினர்களினுடைய உறவினர்கள் தனித்து இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இவ் நிலையின் காரணமாக பாராளுமன்றம் இதில் தலையிட்டு அவர்களுக்கு விரைவில் மேற்குறிய வீடுகளை வழங்குவதற்கு தீர்மானித்திருக்கின்றது.