
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, இலங்கையின் இரண்டாவது ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என அவரது சகோதரரும் பாராளுமன்ற உறுப்பினருமான சமல் ராஜபக்ச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவ்வாறு செய்யத் தவறியதன் விளைவாகவே தற்போதைய நிலைமைக்கு மஹிந்த ராஜபக்ஷ முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
“கிட்டத்தட்ட 50 ஆண்டுகால அவரது சிறப்பான அரசியல் சாதனைகள் மற்றும் பயணம் தற்போது தொலைந்து போயுள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.
அரசியலில் பிரவேசிப்பது மற்றும் ஈடுபடுவதுடன், மக்கள் சரியான நேரத்தில் விட்டுக்கொடுக்க கற்றுக்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
“நமது அதிகாரத்தினை மற்றும் அரசியல் பதவிகளில் இருக்கின்ற பேராசை என்பவற்றால், இன்று நாம் காணுகின்ற இத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்வதினைத் தவிர வேறு வழி நமக்கில்லை” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.