எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (24) நள்ளிரவு முதல் பஸ் கட்டணங்கள் 19.5 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளன.
கட்டண திருத்தத்தின் பிரகாரம் சாதாரண சேவை பேருந்தின் குறைந்தபட்ச கட்டணம் 32 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.
350 வகைகளுக்குட்பட்ட பஸ் கட்டணத் திருத்தமானது தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபைக்கும் பொருந்தும் எனவும் இதன் மூலம் அதிவேக பஸ் கட்டணங்களும் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.