நாளைய(28) தினம் கொழும்பின் சில பகுதிகளுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரவேசிப்பதனை தடை செய்து கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படி, ஆர்ப்பாட்டக்காரர்கள் யோர்க் வீதி, வங்கி வீதி மற்றும் செத்தம் வீதிக்கு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு உள்நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொழும்பு – கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அரச கட்டடங்களுக்கும் உள்நுழையவும் அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.