21 ஆவது திருத்தம் தொடர்பில் இன்று இடம்பெற்ற கட்சி தலைவர் கூட்டத்தில் 21 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை விரைவில் நிறைவேற்றுவதற்கான பொது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றன.
21 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான கட்சித் தலைவர்கள் சந்திப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று இடம்பெற்றது.
குறித்த அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் கட்சித் தலைவர்களின் கருத்துக்களை பெற்றுக் கொள்ளும் நோக்கில் குறித்த சந்திப்பு முன்னெடுக்கப்பட்டதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்றைய சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் கலந்துகொள்ள முடியாத காரணத்தினால், கூட்டமைப்பின் பங்களிப்புடன் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இறுதி சந்திப்பை நடத்தி வரைபை பூர்த்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.