ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால், அடுத்த ஜனாதிபதி பசில் ராஜபக்ஷவே என ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனவே, மாற்றப்பட வேண்டியது தனிமனிதன் அல்ல, தற்போதுள்ள அமைப்பே மாற்றப்பட வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.
கண்டியில் இன்று மஹா நாயக்க தேரர்களை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை முற்றாக நீக்குவது பொருத்தமானதல்ல என அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க வண.ஆனமடுவே ஸ்ரீ தம்மதஸ்ஸி தேரர் தெரிவித்துள்ளார். நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ கண்டியில் உள்ள மகாநாயக்கர்களை இன்று சந்தித்த போதே தேரர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.