நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்ட பண்டாரகமை அட்டுலுகம பகுதியினைச் சேர்ந்த சிறுமியினுடைய மரணம் தொடர்பில் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டிருந்த 29 வயதுடைய இளைஞர் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டிருக்கின்றார்.
குறித்த இளைஞ்சர் உயிரிழந்த சிறுமியினுடைய உறவினர் என்பதுவும் இங்கு குறிப்பிட வேண்டிய விடையமாகும் .
மேலும் சிறுமியினுடைய பிரேத பரிசோதனை அறிக்கைகள் வெளியாகி இருக்கும் நிலையில், குறித்த சிறுமி எந்தவொரு பாலியல் துஷ்பிரயோகத்திற்கும் உட்படுத்தப்படவில்லை எனவும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
இச்சம்பவம் குறித்து பொலிசாரினால் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.