சிறப்பு ரயில்கள் மற்றும் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளுக்கான கட்டணத்தை 30 சதவீதம் உயர்த்த ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. இந்த கட்டண அதிகரிப்பு எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
சாதாரண பயணச்சீட்டுகள், பார்சல்கள் மற்றும் எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு உரிய அதிகாரிகளிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.