
இலங்கை இராணுவத்தின் 24வது தளபதியாக மேஜர் ஜெனரல் லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அவர் லெப்டினன்ட் ஜெனரல் பதவிக்கு உயர்த்தப்படுவார் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவுன் தெரிவித்துள்ளது.
புதிய இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் லியனகேவும் நாளை கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.
பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளதாகவும்ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளார்.
இராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் சவேந்திர சில்வா இன்று தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதோடு, பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக நாளை கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.
இரு இராணுவ அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமனக் கடிதங்கள் இன்று கையளிக்கப்பட்டன.