குழந்தைகளை தனியாக வீதியில் தனிமையில் விட வேண்டாம் என பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கோரியுள்ளது.
அட்டலுகமவில் 09 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அவதானித்ததன் மூலம் சிறுமியை தனியாக கடைக்கு அனுப்பாமல் இருந்திருந்தால் கொலையை தடுத்திருக்க முடியும் என அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.
சிறுவர்களைப் பாதுகாப்பதற்கு ஒவ்வொரு வயது வந்தவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.