வவுனியா – கணேசபுரம், 8ம் ஒழுங்கை பகுதியில் காணாமல் போயிருந்த சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சிறுமியின் சடலம் குறித்த பகுதியில் உள்ள கிணறொன்றில் இருந்து நேற்றிரவு மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
16 வயதான குறித்த சிறுமி தமது உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று (30) தனியார் வகுப்புக்கு சென்றிருந்த அவர், இரவு வரை வீடு திரும்பவில்லை என அவரது உறவினர்களால் நெளுக்குளம் காவல்துறையினரிடம் முறைப்பாடளிக்கப்பட்டது.
இந்தநிலையில் குறித்த பகுதியிலுள்ள கிணறு ஒன்றில் இருந்து அவரது சடலத்தை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதாக நெளுக்குளம் காவல்துறையினர் தெரிவித்தனர்.