பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர படுகொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி துமிந்த சில்வாவிற்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பை இடைநிறுத்துவதற்கு உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, துமிந்த சில்வாவை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவுகளை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளரிடம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், தேவையான அறிவுறுத்தல்களையும் உதவிகளையும் வழங்குமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும் துமிந்த சில்வாவுக்கு பயண தடையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹிருணிகா பிரேமச்சந்திர, அவரது தாயார் சுமனா பிரேமச்சந்திர மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் கசாலி ஹுசைன் உள்ளிட்டோர் ஜனாதிபதியின் மன்னிப்பை சவாலுக்கு உட்படுத்தி மூன்று அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு மீதான விசாரணை செப்டம்பர் 01ஆம் தேதி நடைபெற உள்ளது.