கம்பஹா தக்ஷிலா கல்லூரியில் நேற்று க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு மாணவர்கள் குடைகளை உயர்த்தியவாறு தோற்றிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.
சம்பவத்திற்கு முகங்கொடுத்த பரீட்சார்த்திகளுக்கு மற்றுமொரு மண்டபத்தில் பரீட்சைக்கு அமர்வதற்கு மேலதிக நேரம் வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.