இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து இறக்குமதி பொருட்களுக்கான உற்பத்தி வரியை 15 சதவீதத்தில் இருந்து 200 சதவீதமாக அதிகரிக்க நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த வரி அதிகரிப்பு 06 மாத காலத்திற்கு செல்லுபடியாகும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் மீதான உற்பத்தி வரி 50 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
குளிரூட்டிகள், சலவை இயந்திரங்கள், ரைஸ் குக்கர், மைக்ரோவேவ், குளிர்சாதன பெட்டிகள் மற்றும் தொலைபேசிகள் மீதான வரி 100% அதிகரிக்கப்பட்டுள்ளது.
மற்ற மின்சாதனங்களுக்கான வரி 15% அதிகரிக்கப்பட்டுள்ளது.
சொக்லேட் மீதான வரி 200% அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், LED பல்புகள் மற்றும் அலங்காரங்களுக்கான வரி 50% அதிகரிக்கப்பட்டுள்ளது.