திங்கட்கிழமை (06) முதல் பொதுப் போக்குவரத்துச் செயற்பாடுகளை இடைநிறுத்துமாறு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
பேரூந்துகளுக்கு தேவையான போதிய டீசலை வழங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் வசதிக்காகவே கடந்த சில நாட்களாக தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.
டீசல் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால், அனைத்து தனியார் பேருந்துகளும் திங்கட்கிழமை சேவையை நிறுத்தும் என விஜேரத்ன தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், இதுவரை தீர்வுகள் வழங்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.