அன்றைய தினம் இரண்டாவது துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பாணந்துறை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
பாணந்துறை நிர்மலா மாவத்தை பகுதியில் 31 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் அல்லது சந்தேக நபரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை.
அளுத்கம, மொரகல்ல பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
படுகாயமடைந்த 42 வயதுடைய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.